சனி, டிசம்பர் 03, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

நம்பிக்கை கொண்டோரே! மது116, சூதாட்டம், பலிபீடங்கள்,135 (குறி கேட்பதற்கான) அம்புகள்136, ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! திருக்குர்ஆன்: 5:90



 
பணம் வைத்து ரம்மி விளையாடலாம்! மங்காத்தா விளையாடக் கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு (?)

மஹாலட்சுமி கல்சுரல் அசோசியேஷன் என்ற அமைப்பு சென்னை தி.நகரில் உள்ளது இதில் அதன் உறுப்பினர்கள் கூடி சூது விளையாடுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. 

இதை அறிந்த பொதுமக்களில் சிலர் மேல்படி அமைப்பிற்குள் சூதாட்டம் கலை கட்டுவதாக தி.நகர் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீஸார் விரைந்து சென்று சோதனையிட்டதில் 56 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது கையும் களவுமாகப் படிபட்டுள்ளனர் அத்துடன் சூது விளையாடிய இடத்தில் 178 டோக்கன்களும் 6.75 லட்சம் ரூபாய்களும் கைப்பற்றபட்டு இது மேல்படி அமைப்பின் நிர்வாகிகளின் ஒப்புதலுடன் நடத்தப்படுகிறது என்று நீதிமன்றத்தில் போலீஸ் மனு தாக்கல் செய்தது.

மஹாலட்சுமி கல்;சுரல் அசோசியேஷன் அமைப்பினர் எதிர் மனு தாக்கல் செய்ததில் எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பணம் வைத்து விளையாடியது 13 சீட்டுகளைக் கொண்ட ரம்மி விளையாட்டுத்தான் இது அறிவுத்திறனை வளர்க்கக் கூடியது சூதாட்டமல்ல என்று தாக்கல் செய்திருந்தனர். நாங்கள் கையும் களவுமாக பிடித்த பொழுது அவர்கள் விளையாடியது ரம்மி அல்ல மங்காத்தா தான் என்று போலீஸ் தரப்பில் அடித்துக் கூறி இருந்தனர். 

இரு தரப்பு மனுவையும் பார்வையிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் அவர்கள் 13 சீட்டுகளை வைத்து ரம்மி விளையாடுவது என்பது 3 சீட்டுகளை கொண்டு விளையாடுவது போல் உள்ளதல்ல இது ஒரு அறிவு சார்ந்த விளையாட்டு என்பதால் இதில் பணம் கட்டியும் விளையாடலாம் அதை சூதாட்டம் என்று சொல்லக் கூடாது என்ற திர்ப்பைக் கூறி உள்ளார். அத்துடன் அது ஒரு அஷோசியேஷன் என்பதால் அதற்குள் அடிக்கடி நுழைந்து போலீஸார் சோதனை என்றப் பெயரில் இடையூறு செய்வது நல்லதல்ல என்ற அறிவுரையையும் சேர்த்தே போலீசாருக்கு வழங்கி உள்ளார். 

இன்னும் சிறிது காலங்களில் பணம் வைத்து விளையாடும் மங்காத்தா விளையாட்டில் வெற்றிப் பெறுபவர்கள் இரவு பகலாக உட்கார்ந்து கண் விழித்து மூளையை செலவழிப்பதால் மூளை அசுர வளர்ச்சி அடைகிறது என்பதால் அதை சூது விளையாட்டு என்று சொல்லக் கூடாது மங்காத்தா விளையாடுபவர்களை போலீஸ் தொந்தரவு செய்யக்கூடாது என்று வேறொரு நீதிபதி தீர்ப்பு வழங்கலாம்.

அனைத்து விளையாட்டுக்களுமே அறிவு சார்ந்தது தான் என்பதில் யாருக்கும் மாற்று அபிப்பிராயம் இருக்கவே முடியாது. ஆனால் அந்த விளையாட்டுகளில் பணமோ இன்னப் பிறப் பொருட்களோ பணயமாக்கப்பட்டால் தான் அது சூதாக மாறுகிறது என்பது பாலர் பள்ளியில் பயிலக்கூடிய பாலகர்களும் அறிந்த விஷயம். 

சூது விளையாட்டு கிரிமினல் சிந்தனையை வளர்க்கவே உதவும் கிரிமினல் சிந்தனை வீட்டையும் நாட்டையும் அழிக்கும் தீய சக்தி என்பதை மஹாலட்சுமி கல்;சுரல் அசோசியேஷன் அமைப்பினர் அறிந்திருக்க வில்லை என்பதில் நமக்கு வருத்தமில்லை ஆனால் நாட்டை காக்கும் அரணாகத் திகழக் கூடிய நீதிபதி விளங்கி வைத்திருக்க வில்லையே என்பது தான் நமக்கு வருத்தமளிக்கிறது.  

13ம் நூற்றாண்டில் சீனாவின் பீஜிங் என்றப் பிரதேசத்தை வெற்றிக் கொண்ட குபுலாங் கால் என்ற வீரன் மக்களை நோக்கி நான் இந்த தேசத்தை கடும் முயற்சியால் வெற்றி கொண்டுள்ளேன் இந்த தேசத்து மண் முதல் அனைத்தும் எனக்கு சொந்தமானதே! இதிலிருந்து எதையும் நீங்கள் முறையான வழியில் அடைந்து கொள்ளலாம் மாறாக எவரும் எந்தப் பொருளையும் உங்களுடைய உடமை என்றெண்ணி சூது விளையாட்டில் தோற்று விட முடியாது அவ்வாறு எவராவது எங்காவது சூது விளையாடினால் அவர்களை எனது வால் சந்திக்கும் என்று பிரகடனம் செய்தான். இது நாட்டின் மீதுள்ள அவனுடைய பக்தியை பறைசாற்றியது.  

குபுலாங் காலுடைய பிரகடனத்திற்கு முன்னரே சூதை ஒழித்தால் அல்லது அதிலிருந்து விலகினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியும் என்று (1400 வருடங்களுக்கு முன்) மனிதகுலத்தை நோக்கி திருமறைக் குர்ஆன் எச்சரிக்கை செய்து விட்டது. 

நம்பிக்கை கொண்டோரே! மது116, சூதாட்டம், பலிபீடங்கள்,135 (குறி கேட்பதற்கான) அம்புகள்136, ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! திருக்குர்ஆன்: 5:90

இன்று தேசபக்தியாளர்கள் என்பவர்களை இந்தியாவில் சல்லடை இட்டுத் தேடினாலும் அரசப் பதவியில் இருப்பவர்கள் முதல் அரசப் பதவியில் அமரத் துடிக்கும் அண்ணா ஹாசாரே வரை எவரிடமும் காண முடியாது என்பதால் சூது நாட்டை அழிக்கும் தீய சக்தி என்பதைப் பற்றி அறவே கவலைப் படாமல் தேச நலலை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பை வழங்கி உள்ளார் நீதிபதி ராஜேந்திரன் அவர்கள்.  



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்